மகிந்தானந்த - நளினின் மோசடி விசாரணை! நீதிமன்றத்தின் விசேட உத்தரவு
முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ உள்ளிட்டோரின் நிதி மோசடி வழக்கு தொடர்பில் கொழும்பு மேல்நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (05.02.2026) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் அலுவலகங்களுக்கு கரம்போட் மற்றும் தாம் பலகைகள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பின்வரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகிந்தானந்த அளுத்கமகே
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவை அறிவிப்பது மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |