மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டம்..! மகிந்த அளித்த பதில்
Colombo
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
தனக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இல்லையெனவும் தான் ஆட்சி செய்தது போதும் எனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சம்புத்தா லோகய விகாரைக்கு நேற்றைய தினம் வருகை தந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு உதவுவது அவசியம்
தற்போது மக்கள் நெருக்கடியான நிலையில் உள்ள நிலையில் மக்களுக்கு உதவுவது அவசியமென நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.நாங்கள் எப்பொழுதும் மக்களின் பக்கமே நின்றோம்.
அது உண்மை தான்
இதன்போது "உண்மையை சொன்னால் உங்களின் ஆட்சியின் போது மக்கள் இந்தளவுக்கு பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. நிலைமை அப்போது சிறப்பாக இருந்தது" என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தவேளை “உண்மைதான். நீங்களே அதை சொன்னால் அது உண்மை தான்” என மகிந்த பதிலளித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்