தமிழ் பேசும் மக்களிடம் முரண்பாட்டை தோற்றுவிக்க சதி! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
speech
parliament
sanakkiyan
By Vanan
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுமியின் மரணத்தை வைத்து மலையக தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.