மகள்கள் என்றும் பாராமல் தந்தையின் கொடூரம் - வழங்கப்பட்டது 702 வருட சிறை
பதின்ம வயதான தனது மகள்களை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி அதில் ஒருவரை கர்ப்பமடையச் செய்த கொடூர தந்தைக்கு 702 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேஷியாவிலேயே இந்த தண்டனையை நீதிபதி பிறப்பித்தார்.
சுகாதார பணியாளரான தந்தை

சுகாதார பணியாளரான 53 வயதுடைய தந்தைக்கே இந்த உச்சபச்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் தனது 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்களை 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
நீதிபதி அளித்த தீர்ப்பு

இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தபட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறைத் தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.