அதிகாலைவேளை கட்டுநாயக்காவில் வந்திறங்கியவர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
Arrest
By Jaso
இன்று அதிகாலை (13) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், 26,600 சுங்கவரி விலக்கு பெற்ற சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில், சந்தேக நபரிடமிருந்து 133 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
காவல்துறையினரால் மேலதிக விசாரணை
சந்தேக நபர் மாரவிலவைச் சேர்ந்தவர் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்