ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவல்துறைப் பரிசோதகர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.25,000 கோரிய குற்றச்சாட்டின் பேரில் கடவத்தையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை காவல்துறையினரால் சந்தேகநபர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதாக கூறி அவரிடம் 25,000 பணத்தை கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் காவல்துறையிடம் அளித்த முறைப்பபாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி அடையாள அட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 33 வயதான சந்தேக நபர் மபிம, ஹெய்யன்துடுவ (Mabima, Heiyanthuduwa) பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |