பப்புவா நியூகினியாவில் திருடிய வலம்புரியை அம்பாறையில் விற்க முயன்றவர் கைது (படங்கள்)
பப்புவா நியூ கினியாவில் திருடப்பட்ட வலம்புரி
பப்புவா நியூகினியா நாட்டில் இருந்து திருடப்பட்டு இலங்கைக்கு நூதனமாக கொண்டு வரப்பட்ட நிலையில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வலம்புரி சங்குடன் அம்பாறையில் நபர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் அம்பாறை முகாம் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன குமாரவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த வலம்புரி சங்கு நேற்று கைப்பற்றப்பட்டது.

தொலைபேசி ஊடாக தொடர்பு
தொலைபேசி ஊடாக வலம்புரி விற்பனை செய்ய முயற்சித்த நபருடன் தொடர்பு கொண்டு அம்பாறைக்கு அழைத்து வந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவராவார்.

வலம்புரி குறித்து நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வலம்புரி, அவர் பணியாற்றிய பப்புவா நியூகினியாவில் உள்ள பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து திருடப்பட்டு, விமானம் மூலம் இலங்கை கொண்டுவந்தது தெரியவந்தது.