மோசமான கட்டத்தில் இலங்கை! பகிரங்கப்படுத்திய தகவல்
srilanka
colombo
mangala samaraweera
By Vasanth
இலங்கையில் பெரும்பான்மைவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவை இப்போது மிகவும் மோசம் அடைந்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் பெரும்பான்மைவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவை இப்போது மிகவும் மோசமாக அடைந்திருக்கின்றன.
அண்மையில் இரவில் மிகவும் தாமதாக நடமாடிய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டமை, இளம் சூழலியலாளர் மீதான அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தற்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.