பாடசாலைக்கு கைக்குழந்தையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு அமைச்சர் செய்த உதவி(photos)
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி பாடசாலைக்கு உடன் பிறந்த கைக்குழந்தையை அழைத்துவந்து மடியில் வைத்துக்கொண்டே பாடம் படித்த புகைப்படம் கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மெய்நிங்க்ஸின்லியு பமேய்(Meiningsinliu Pamei) என்ற அந்த 10 வயது சிறுமி டமேன்க்லாங் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் டைலாங் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்துவருகிறார்.
இவரின் பெற்றோர் விவசாய வேலை செய்து வரும் நிலையில், பெற்றோரின் பணிகாரணமாக அவர்களின் கைக்குழந்தையை பகல் நேரத்தில் கவனித்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இந்த 10 வயது சிறுமி கைக்குழந்தையை தன்னுடன் வகுப்பறைக்கு அழைத்துவந்து மடியில் வைத்துக்கொண்டே பாடம் கவனித்துள்ளார்.
Her dedication for education is what left me amazed!
— Th.Biswajit Singh (@BiswajitThongam) April 2, 2022
This 10-year-old girl named Meiningsinliu Pamei from Tamenglong, Manipur attends school babysitting her sister, as her parents were out for farming & studies while keeping her younger sister in her lap. pic.twitter.com/OUIwQ6fUQR
இதை ஒருவர் புகைப்படம் பிடித்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கடந்த மாதம் வைரலாகியது. இது மணிப்பூர் அமைச்சர் தோங்காம் பிஸ்வஜித் சிங் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த சிறுமியின் கற்கும் ஆர்வத்தை பாராட்டி அவரை இம்பாலில் உள்ள போர்டிங் பள்ளியில் அனுமதி பெற்று தந்துள்ளார்.
மேலும், சிறுமியின் கல்விக்கான அனைத்து உதவியையும் அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'எனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இம்பாலில் உள்ள ஸ்லோப்லாந்து போர்டிங் பள்ளியில் சிறுமியின் சேர்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். இவர் எதிர்காலத்தில் சிறந்து விளங்க என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள்' என ட்வீட் செய்துள்ளார்.


