மன்னாரை உலுக்கிய இரட்டைக் கொலை - 18 சந்தேக நபர்கள் கைது
மன்னாரை உலுக்கிய வாள்வெட்டு
மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 10 திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் 6 பேரும் இன்று புதன்கிழமை காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன்பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் கைது
இக் கொலையுடன் சம்மந்தப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட 6 சந்தேக நபர்ளையும் இன்று காலை மன்னார் காவல்துறையினர் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில், இன்று புதன் கிழமை(18) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்ட்ட 14 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று (22) உத்தரவிட்டார்.
இதுவரை குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.