தீர்க்கப்பட்டது QR குறியீடு சிக்கல் : பதிவு செய்யாதவர்களுக்கு வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்ட QR குறியீடு தொடர்பான பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமகே தெரிவித்துள்ளார்.
இதுவரை, சுமார் 10,000 பேரைத் தவிர, மற்ற அனைவருக்கும் அவர்களின் QR குறியீடு கிடைத்துவிட்டதாகவும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சிக்கல்களை எதிர்கொண்ட சிறிய எண்ணிக்கையிலானவர்கள்
மேலும், பதிவு செய்யும் போது மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதால், உரிய QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை எளிதாகப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

இன்று தங்களால் பதிவு செய்ய முடியவில்லை என்று மிகச் சிலரே எங்களிடம் கேட்டுள்ளனர். நாங்கள் பேசியபோது, அவர்கள் நேற்று சரிபார்த்துவிட்டு இன்று சரிபார்க்கவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, இன்று மீண்டும் சரிபார்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மணி நேரத்திற்கு 30,000 புதிய பதிவுகள்
சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 30,000 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்றவர்களுக்கு, ஒரு பிழை ஏற்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் 30,000 பேர் பதிவு செய்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் இப்போது இந்தப் பிரச்சனைகளை ஓரளவிற்குத் தீர்த்துவிட்டோம்.

புதிய QR குறியீடு வராது. நாங்கள் சுமார் 2 மில்லியன் தரவுகளை நீக்கிவிட்டோம். இப்போது மிகச் சிலரே செயலற்றவர்களாகக் காட்டப்படுகிறார்கள்... எனவே அந்தச் சிலரும் மீண்டும் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.
QR ஒதுக்கீடு இந்த வார இறுதியில் முடிவடையும், எனவே QR குறியீட்டைப் பதிவு செய்து, தங்களுக்கு உரிமையான எண்ணெய் அளவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஆவணங்கள் சட்டபூர்வமாக மாற்றப்படவில்லை
சில தரப்பினருக்குச் சொந்தமான வாகனங்களுக்கான உரிய ஆவணங்கள் சட்டபூர்வமாக மாற்றப்படவில்லை என்று தகவல்கள் வருவதாகவும், அதற்காக ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மயூர நெத்திகுமரகே மேலும் கூறினார்.

அதன்படி, 9 மாகாணங்களுக்கு 9 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடையாளத்தைச் சரிபார்த்த பிறகு QR குறியீட்டைப் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
"சிலரின் வாகனங்கள் தொடர்பான புத்தகம் சட்டபூர்வமாக மாற்றப்படவில்லை. அதனால் அது எங்கும் பதிவு செய்யப்படாது. அந்த நபர்களுக்காக, 9 மாகாணங்களுக்கு 9 எண்களை அனுப்புவோம் என்று இன்று அறிவிப்போம். அந்த எண்ணுக்கு அவர்கள் என்ன அனுப்ப வேண்டும் என்பதை இன்று உங்களுக்குத் தெரிவிப்போம்.
நீங்கள் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக நீங்கள் வாட்ஸ்அப் செய்தவுடன், அந்தத் தரவைச் சரிபார்த்து உங்களுக்காக அதை மீண்டும் ஏற்பாடு செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம்."என மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |