கமேனியின் மரணத்திற்கு பகிரங்கமாக இரங்கல்! ஈரான் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட புடின்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்ய அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உரையாடலில், இரு நாடுகளும் எதிர்காலத்திலும் பல்வேறு வழிகளின் மூலம் தொடர்புகளை தொடர்ந்து வைத்திருக்க ஒப்புக்கொண்டதாக கிரெம்லின் கூறியுள்ளது.
கமேனிக்கு இரங்கல்
இதன்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கிய பிறகு ஜனாதிபதி மட்டத்தில் இடம்பெற்ற முதல் தொடர்பு இதுவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த உரையாடலில் ஈரானின் உச்சத் தலைவரின் உயிரிழப்பிற்கு புடின் தனது இரங்கலை தெரிவித்ததாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம்
மேலும் மத்திய கிழக்கில் உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தி அரசியல் மற்றும் தூதரக பேச்சுவார்த்தை வழியில் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

Image Credit: CEPA
அத்துடன், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் தலைவர்களுடன் தாம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் புடின், பெசஷ்கியானிடம் தெரிவித்ததாகவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.