அநுரவின் வருகையின் பின் நாட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வு : செந்தில்வேல் சுட்டிக்காட்டு
புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் (Senthilvel) தெரிவித்துள்ளார்.
இன்று (27) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம். எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரித்து இருக்கிறது.
மாக்சிச நிலைப்பாடு
தற்போதைய ஜனாதிபதி மாக்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர். தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி (UNP), சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள். ஆனால் தற்போது புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.
அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள்
எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன்வைத்தாரோ அதேபோல செயற்பட வேண்டும். பலர் தேர்தலுக்கு முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயற்படுவது இல்லை. எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார். சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.
ரணில் (Ranil) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந்த நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த அநுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
