முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் எம்.பி நந்திக்கடலில் அஞ்சலி
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றது.
அந்தவகையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாக இன்று அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனை
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |