தேசிய தலைவரை நினைவு கூர்ந்த சீமான் : கடலென திரண்ட மக்கள்
கோவையில் (Coimbatore) மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தலைமையில் டுன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிட்டு குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
சொந்த மண்
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சீமான், வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமையாக நாம் வாழந்துகொண்டு இருக்கின்றோம்.
தமிழ் தேசிய மக்கள் நமக்கென்று குரல் எழுப்ப ஒருத்தர் இல்லாமல் தற்போது போராட்ட சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இருந்தாலும், தமிழீழத்தையும் தமிழையும் மேலும் வலுவாக வளர்த்து வருகின்றனர் நம் தமிழ் மக்கள், அதனை மீட்டு அவர்கள் கையில் தர உதித்த தலைவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
மாபெரும் தலைவர்
இருந்தாலும், தமிழீழத்தையும் தமிழையும் மேலும் வலுவாக வளர்த்து வருகின்றனர் நம் தமிழ் மக்கள், அதனை மீட்டு அவர்கள் கையில் தர உதித்த தலைவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
தமிழ் தாயின் வரலாற்றில் மாபெரும் தலைவராக பிறந்த எம் தலைவர், அனைத்து தமிழ் மக்களும் வாழ வேண்டும் என நினைத்தமையினால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழீழ மக்களின் வரலாற்று பாதை, வலி சுமைகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
