மன்னாரில் ஒருவாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை
மன்னார் மாவட்டத்தில் நேற்று (03) முதல் ஒரு வாரத்திற்கு மாட்டிறைச்சி, ஆடு மற்றும் பன்றி இறைச்சியை விற்பனைக்கு சேமித்து வைப்பதும், இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸா தெரிவித்தார்.
இந்த பேரிடரில் மன்னார் மாவட்டத்தில் கால்நடைகள் உட்பட ஏராளமான பண்ணை விலங்குகள் உயிரிழந்தள்ளன.மேலும் அந்த விலங்குகளின் இறைச்சி மனித நுகர்வுக்காக சந்தைக்கு கொண்டு வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பேரிடர்களில் இறந்த விலங்குகளின் உடல்கள்
இருப்பினும், வெள்ளப் பேரிடர்களில் இறந்த விலங்குகளின் உடல்கள் மனித நுகர்வுக்காக விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறதா என்பதைப் பார்க்க நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் விழிப்புடன் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால், அவர்கள் தங்கள் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அது சாத்தியமில்லை என்றால், சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணி நேர ஹொட்லைன் எண்ணான 1926க்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |