இளைஞனை மோதித் தள்ளிய சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம்
கிளிநொச்சியில் (Kilinochchi) காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னராசா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் அவரது நண்பரும் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மரண விசாரணை
இதன்போது 54ஆம் கட்டையடியில் காஸ் சிலிண்டர் ஏற்றிவந்த வாகனத்துடன் மோதி படுகாயமடைந்தார். இந்நிலையில் அவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர் 22ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி 22ஆம் திகதி மாலை உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
