50 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள ராஜயோகம் : ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி பல சுபயோகங்களை உருவாக்குகின்றன.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் தெரியும். நவக்கிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் அஸ்தமன நிலையில் கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சூரியன், சனி ஆகிய கிரகங்கள் பயணித்து வருகின்றன.
ராஜயோகம்
இந்தநிலையில் புதனும் நுழைந்துள்ளதால், இந்த 3 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிப்பதோடு, விபரீத ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளன.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக, வாழ்க்கையில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வரப்போகிறது.
குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். இப்போது புதன் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம் | கடக ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது பலவிதமான நன்மைகளை தரும். முக்கியமாக திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் பங்குச் சந்தையில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதனின் பரிபூர்ண அருளால் வெற்றிகள் கிடைப்பதோடு, நிறைய லாபமும் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். உங்களின் திட்டங்கள் நல்ல பலனைத் தரும். |
கன்னி | கன்னி ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரப்போகிறது. செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சமூகத்தில், பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பொருள் வசதிகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். |
தனுசு | தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது எதிர்பாராத நன்மைகளை வழங்கப்போகிறது. இக்காலத்தில் உங்களின் வாழ்க்கைத் துணையும் அவரது தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சொத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். |
[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)