இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவை : கிளம்பியுள்ள எதிர்ப்பு
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 'மெட்ரோ'பேருந்து சேவைக்கு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு மேலதிக சுமையையே ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த சேவை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதிகளவு டீசலை நுகர்கின்றன
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக வீதிக்கு இறக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ பேருந்துகள் முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமான முறையில் இயக்கப்படுகின்றன.

தற்போது சொந்தமாக வாகனங்களைப் பயன்படுத்தும் சாரதிகளை இந்தப் புதிய பேருந்து சேவை ஈர்க்கப் போவதில்லை, இந்த திட்டம் பொதுமக்களுக்கு தவறான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண பேருந்துகளுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மெட்ரோ பேருந்துகள் அதிகளவு டீசலை நுகர்வதன் காரணமாக இந்த திட்டத்தில் ஏற்படும் எந்தவொரு நிதி நஷ்டத்தையும் இறுதியாகப் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும்.
அவசியமற்ற ஒரு திட்டத்திற்காக அரசாங்கம் பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்துவதுடன், இந்த மெட்ரோ பேருந்து சேவையின் செயற்பாடுகள் மற்றும் அதன் நிதி நம்பகத்தன்மை குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.” என குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |