மத்திய கிழக்கு இஸ்ரேலுக்கே சொந்தம்...! அமெரிக்கத் தூதரின் கருத்தால் பெரும் கொந்தளிப்பு
மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பகுதி இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்ற இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியின் சர்ச்சைக்குரிய கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இவ்வாறு தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
செய்தி நிறுவனம் ஒன்றின் வர்ணனையாளரான டக்கர் கார்ல்சன் என்பவர், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியைச் சமீபத்தில் நேர்காணல் செய்தார்.
இஸ்ரேலுக்கு உரிமை
அப்போது அவர், “பைபிளின்படி, ஆபிரகாமின் சந்ததியினருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் இன்றைய ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கியது.
அந்த நிலத்தின் மீது இஸ்ரேலுக்கு உரிமை உண்டா?” என ஹக்கபியைக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த ஹக்கபி, “நீங்கள் சொல்வது போல், இஸ்ரேல் அனைத்தையும் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை.
இருப்பினும், இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்க விரும்பவில்லை.
அமைதி ஒப்பந்தங்கள்
தான் வைத்திருக்கும் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கவே இஸ்ரேல் விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஹக்கபியின் இக்கருத்துக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு லீக் ஆகியவை கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

கடந்த 1948இல் இஸ்ரேல் உருவானது முதல், அந்நாட்டிற்கு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் இல்லை.
போர்கள், இணைப்புகள் மற்றும் அமைதி ஒப்பந்தங்கள் அடிப்படையில் அதன் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |