கோடீஸ்வர வர்த்தகர் நடத்திய கொல்களம் சிக்கியது - கடும் அழுத்தம் கொடுத்த முன்னாள் அதிபரின் செயலாளர்
வெலிப்பன்ன பிரதேசத்தில் கோடீஸ்வர மாணிக்க வியாபாரி ஒருவரால் பாரியளவில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத இறைச்சிக் கொல்களத்தை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் (26) அதிகாலை சுற்றிவளைத்து மாணிக்கக்கல் வர்த்தகர் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட 13 எருமை மாடுகள் வெட்டுவதற்காக தயார் செய்யப்பட்ட நிலையில், அந்த விலங்குகளும் காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
இலஞ்சம் கொடுக்க முற்பட்ட வர்த்தகர்

கைது செய்யப்பட்ட கோடீஸ்வர மாணிக்க வியாபாரியை காப்பாற்றுமாறு முன்னாள் அதிபர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளார். அந்த அழுத்தங்களுக்குஅடிபணியாத காவல்துறைஉத்தியோகத்தர்களுக்கு 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கொடுத்து தப்பிக்க குறித்த வர்த்தகர் கடுமையாக முயற்சித்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்தது.
காவல்துறையில் செல்வாக்கு செலுத்திய முன்னாள் அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திருகோணமலையைச் சேர்ந்த அரசியல்வாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்கவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெலிப்பன்ன காவல்நிலையத்திலிருந்து 800 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த போலி மாட்டு இறைச்சி கொல்களம் சில காவல்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நீண்டகாலமாக இயங்கி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாடுகளை திருடி

இந்த இறைச்சி கூடத்தை நடத்தி வந்த முஸ்லிம் மாணிக்க வியாபாரி, திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகளை திருடி தெற்கு நெடுஞ்சாலைகளில் கொண்டு சென்று வெலிப்பன்ன இறைச்சி கொல்களத்திற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட குழுவொன்றை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில உயர் காவல்துறை அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைப் பேணிக் கொண்டு அவர் நீண்டகாலமாக இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் காவல்துறை அத்தியட்சகர் உதய குமார அவர்களின் ஆலோசனையின் பேரில் அதன் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக வீரசிங்க உப காவல்துறை பரிசோதகர் ரத்நாயக்க சுபுன் சார்ஜன்ட்கள் (51068) புஷ்பகுமார (92908) இஷான், ( 104555) லதிஷா (104679) நிரஞ்சன் (1050) 59) பிரசன்னா காவலரான சாரதி (94734) ரொட்ரிகு உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.