மாதந்தோறும் இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 210,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது, இது கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மிகவும் மோசமாக உள்ள சுற்றுலாத் துறையில் சாதகமான வளர்ச்சியைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை,ஜனவரியில் ◾102,545,பெப்ரவரியில் ◾107,639
அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை
இவ்வருடம் பெப்ரவரியில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 107,639 என்றும், இது 2022 பெப்ரவரியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின்(96,507 ஆக இருந்தது) எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 11.53% அதிகரிப்பு என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டுகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 210,184 என்றும், பெப்ரவரி மாதத்தில் 29,084 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் 13,714 இந்திய சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர், இது முறையே மொத்த சுற்றுலாப் பயணிகளில் 27% மற்றும் 13 %. என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பலர் வருகை
இது தவிர, இங்கிலாந்தில் இருந்து 8,575 பேர், ஜெர்மனியில் இருந்து 7,930 பேர், பிரான்சில் இருந்து 6,118 பேர், அவுஸ்திரேலியாவில் இருந்து 3,113 பேர், கனடாவில் இருந்து 3,107 பேர் கடந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்த நாடுகளாகும்.
2022 இல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 700,000 ஐத் தாண்டியது மற்றும் 719,978 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர், இது 2021 உடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய வளர்ச்சியாகும்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 3 மணி நேரம் முன்
