தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுட்டுக்கொலை - பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
Sri Lanka Police
Shooting
Sri Lankan Peoples
Crime
By Sumithiran
பொதுமக்களின் உதவி
மினுவாங்கொடை, கமங்கெதரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தேடப்படும் சந்தேக நபர், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதி, இல. 10 இல் வசித்து வந்த சஞ்சீவ லக்மால் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பட்டம் விடுவது தொடர்பான தகராறு
நீண்ட காலமாக நிலவி வந்த பட்டம் விடுவது தொடர்பான தகராறு காரணமாக அண்மையில் மினுவாங்கொடையில் தந்தையும் அவரது இரு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591608, 071-8591610 மற்றும் 071-8591612 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது