2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்து அழகி
India
Thailand
miss world 2025
By Sumithiran
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி(miss world 2025) பட்டத்தை ஓபல் சுச்சாட்டா சுங்ஸ்ரீ என்ற தாய்லாந்து (thailand)போட்டியாளர் வென்றார்.
1951 ஆம் ஆண்டு கிரேட் பிரிட்டனில்(uk) தொடங்கிய 72வது உலக அழகி பட்டப் போட்டி மே 7 ஆம் திகதி இந்தியாவின்(india) தெலுங்கானாவில் தொடங்கியது.
இந்த ஆண்டு, உலக அழகி பட்டப் போட்டியில் 108 போட்டியாளர்கள் பங்கேற்றனர், மேலும் அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டனர்.
நான்கு கண்டங்களாக பிரிப்பு
அமெரிக்கா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா எனப் பிரிக்கப்பட்டன.
ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இலங்கையிலிருந்தும் இந்த போட்டியில் அனுதி குணசேகர என்பவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி