காணாமல் போன பதின்ம வயது இரு சிறார்கள்! அவசர உதவிகோரும் காவல்துறையினர்
கொடதெனியவ காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட வத்தேமுல்ல என்ற பிரதேசத்தில் இரு சிறுவர்கள் காணாமல் போனமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்கள் 10 மற்றும் 12 வயதுடையவர்கள் என காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
காணாமல்போயுள்ள சிறுவர்களில் ஒருவரான கவீஷ சந்தகெலும் (வயது -10) என்பவர் இறுதியாக நீல நிற டீ - ஷர்ட்டும், கறுப்பு நிறக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும், வாயின் மேற்பகுதியில் இரு பற்கள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமல்போயுள்ள மற்றைய சிறுவனான அகில தேதுனு (வயது -12) என்பவர், இறுதியாக நீல நிற கொலருடனான டீ - ஷர்ட் மற்றும் சிவப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகவும், மேற்பக்க பல் வரிசை முன்னோக்கி சற்று நீண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடடதெனியாவ OIC - 071 859 1634 -
கொடதெனியாவ காவல் நிலையம் - 033 224 0050/033 227 2222