யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று (28.06.2025) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார்.
தீவிர விசாரணை
வழமையாக காலை 9:00 மணியளவில் கரை திரும்பும் குறித்த கடற்றொழிலாளர் அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி அவர் பயணித்த கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
இதனை அவதானித்த தேடிச்சென்ற கடற்றொழிலாளர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேசகத்தில் கட்டுமரத்தை கரைக்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன கடற்றொழிலாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இரண்டு நாளும் சடலம் கண்டுபிடிக்கப்படாத. நலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
