அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் விதித்த நிபந்தனை!
நாட்டின் இராணுவத் திறன்கள் ஒரு சிவப்புக் கோடு என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அது குறித்து விவாதிக்கப்படாது என்றும் ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் அறிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய மஜித் இப்னு அல்-ரெஸா, “ஈரானின் பாதுகாப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்கள் நமது தேசியப் பாதுகாப்பிற்கான ஒரு சிவப்புக் கோடு ஆகும். இவை இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல“ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டங்கள் தொடர்ந்து முன்னேற்றமடையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சவலான ஈரானின் நிபந்தனைகள்
இந்த நிலையில், மத்தியகிழக்கு விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்கத் துணை உதவி இராஜாங்கச் செயலாளர் கோர்டன் கிரே, ஈரானின் சில நிபந்தனைகள் அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதால், அமெரிக்கா இதனை ஆரம்பத்திலேயே நிராகரிக்கும் என்று சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |