உண்மையும் நீதியும் கோரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க போராட்டம்! விடுக்கப்பட்ட கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
யுத்தம் முடிந்து 17 வருடங்கள்
அவர்களால் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் நிறுவனங்களுக்கும் கலந்து கொள்வதற்கான அழைப்பும் ஆதரவுகோரியும் ஊடக சந்திப்பு ஒன்று நடாத்தப் பட்டிருக்கின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்.
யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப் பட்டிருக்கின்றார்கள்.
அதேபோல் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்க விருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10