பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அரசாங்க பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் தவணையின் முதல் கட்டம் நாளை (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறை
பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டாய விடுமுறை
இதேவேளை புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது கண்டறியப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு மேலதிகமாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தைக் கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |