ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி நன்றி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக நின்ற ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக ஈராக்கின் உயரிய மத அதிகாரமான (Supreme Religious Authority) மகா அயதுல்லா அலி சிஸ்தானி மற்றும் ஈராக் மக்களுக்கு ஒரு எழுத்துப்பூர்வ செய்தி மூலம் அவர் இந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்என்ஏ (ISNA) செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
முஜ்தபா காமேனி ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராகப் பதவியேற்ற பிறகு போர்ச் சூழலில் பொதுவெளியில் நேரில் தோன்றாமல் இருப்பது அவரது இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்த பலத்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இருப்பினும், வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து அவர் குணமடைந்து வருவதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் சில அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய அயதுல்லா ருஹொல்லா கொமேனி மற்றும் தனது தந்தை அலி காமேனி ஆகியோருக்குப் பிறகு இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள முஜ்தபா காமேனி, ஷியா இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஈராக் உடனான இந்த இராஜதந்திர நெருக்கமானது மத்திய கிழக்கில் அமெரிக்க எதிர்ப்பு அலைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |