மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு அரசு அளித்துள்ள சலுகைகள் அம்பலம்
அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு ஒருங்கிணைப்புச் செயலாளர் பதவிகள், வாகனங்கள் மற்றும் ஏனைய சலுகைகள் உட்பட பல்வேறு பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
"பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே இவ்வாறான பதவிகள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது" என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சர்கள் நியமனம் தாமதமாகி வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்தவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் பத்து உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு பெரமுன அதிபரிடம் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் காலதாமதம் செய்வதால், நாடாளுமன்றத்தில் சில முக்கிய சட்டமூலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்” என அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்