பிள்ளையின் கல்விக்காக ஒரு தாயின் ஓர்மப் போராட்டம் - கொழும்பில் சம்பவம்
இலங்கையில் ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு அதிபர் செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே தனது மகளை தோளில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாயின் ஆதங்கம்
“நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணம் காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள எனைய மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பில் காவல் நிலையத்துக்கும் பாடசாலையின் அதிபருக்கும் அறிவித்துள்ளார்கள். இதனால், பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள அதிபர் மறுக்கிறார்” என போராட்டத்தில் ஈடுபட்ட தாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட தாயை அதிபர் செயலகத்துக்குள் அழைத்துச் செல்வதாகவும், ஆனால் கையிலிருக்கும் பதாகையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல முடியாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வயிற்றில் சுமக்க முடியும் என்றால் தோளில் சுமக்க முடியாதா
நான் வந்தால் கையிலிருக்கும் பதாதையுடனேயே வருவேன் என தாய் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
தோளில் இருக்கும் பிள்ளையைக் கீழே இறக்குங்கள் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கும், பிள்ளையை வயிற்றில் சுமக்க முடியும் என்றால் தோளில் சுமக்க முடியாதா?
என்னைக் கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தால் பிள்ளையுடன் வாகனத்தின் மீது பாய்ந்துவிடுவேன் எனவும் அந்தத் தாய் எச்சரித்துள்ளார்.
