கோட்டாபய பதவி கவிழ்ப்பில் சுமந்திரனுக்கு அடி! இந்தியத்தூதர் சம்பந்தனிடம் ஓட்டம்
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்தியதன் பின்னணியில் இந்தியா இல்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரணில் தரப்புக்கு கூட்டமைப்பு வழங்க வேண்டிய ஆதரவு நிலை குறித்து மறைமுகமான நாடிப் பிடிப்பை செய்வதற்காக சம்பந்தனது இல்லத்திற்கே நேரடியாகச் சென்ற பாக்லே, ஒரு மணிநேர பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா செலுத்த வேண்டிய அவதான நிலை குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இன்று நாடாளுமன்றத்தில் இரு முக்கிய வாக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்த இரண்டு வாக்கெடுப்புக்களிலும் ராஜபக்ச தரப்பு தான் வெற்றி அடைந்திருக்கிறது.
இதன் விரிவான, மேலும் பல நிகழ்கால நிதர்சனங்களுடன் வருகிறது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு,