திரைப்பட பாணியில் கோவையில் கொள்ளை! தமிழ்நாட்டை அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம்
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக வீடு புகுந்து கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, இணைய மோசடி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நகர்ப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் நடக்கும் தொடர் கொள்ளைகள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.
காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, வேலைவாய்ப்பு இல்லாமை, பொருளாதார அழுத்தம், போதைப்பொருள் பழக்கம் ஆகியவை கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகள் பெருகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சில பகுதிகளில் முதியோர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நடக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் திரைப்பட பாணியில் இடம்பெற்ற ஒரு கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சி நிலைகளை தொடரும் காணொளி தொகுத்து வருகிறது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |