சாமர சம்பத்திற்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை (Chamara Sampath) பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதுளை (Badulla) நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
ஒரு மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக பதுளை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியில் இருந்து 1 மில்லியன் ரூபாயை தவறாக பயன்படுத்தினார் என்பதற்காக கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, வழக்குகள் தொடர்பாக இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
