மண்ணுக்குள் மறைந்த இனவழிப்பின் சாட்சியங்கள்: திட்டமிட்டு புறந்தள்ளும் அரசு
யாழில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் விவகாரம்தான் தற்போது தமிழர் பிரதேசத்தில் பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ளது.
யாழ்ப்பாணம், அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் ஏழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அண்மையில் அடையாளம் காணப்பட்டது.
நாட்டில் இனப்படுகொலை என்ற ஒன்று நடைபெறவில்லை என தெரிவித்து ஆரம்பத்திலிருந்து தற்போது வரை வந்த அரசாங்கங்கள் வரை சர்வதேச விசாரணைகளை புறந்தள்ளி வருகின்றனர்.
தற்போது இவ்வாறு மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் இது தொடர்பில் முழுமையாக சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்தும், தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் குறித்தும், தமிழ் மக்கள் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பிலும் நேரடியாக மக்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
