முல்லைத்தீவு இளைஞர்களை காவு கொண்ட கோர விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு
அனுராதபுரத்தில் (Anuradhapura) அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற நால்வர் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞனும் உயிரிழந்துள்ளார்.
கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பிற்கு சென்ற வான் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் வைத்து முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, செம்மலைப் பகுதிகளை சேர்ந்த புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொற்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஐந்தாவது இளைஞர் உயிரிழப்பு
இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞனும் நேற்று (29) உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு - மல்லிகைத்தீவினைச் சேர்ந்த 21 வயதான நடராசா விஸ்னுயன் என்ற இளைஞன் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
