முல்லைத்தீவில் விதிக்கப்பட்ட தடை- நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகல் பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு காவல் நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி எஸ் தனஞ்சயன் குறித்த வழக்கில் முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.