ஐபிசி தமிழின் முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் முயற்சி!
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற மேலும் இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் (விஸ்வா ) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு சென்ற ஐபிசி தமிழின் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அறிக்கையிட வேண்டாம் என தெரிவித்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட இடத்திற்கு உடனடியாக சென்ற அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவரே தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்திருந்தார் எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் மற்றும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுத்தத்தங்களை சாட்சிகளை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இதன் போதே குறித்த இராணுவ அதிகாரி இரண்டு ஊடகவியலார்களையும் கடமையை தடுக்கும் நோக்கில் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார். சம்பவத்தை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு தொடர்சியாக புலனாய்வாளர்கள் வெவ்வேறு இலக்கங்களிலிருந்து தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.