விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

Sri Lanka Police Mullaitivu Journalists In Sri Lanka
By Eunice Ruth Mar 13, 2024 02:54 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு இன்றைய தினம் (13) சென்ற அளம்பில் காவல்துறையினர் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர்.

விசாரணை

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக திருச்செல்வம் திவாகர், எதிர்வரும் 15 ஆம் திகதி இல.149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ, கொழும்பு - 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் முன்னிலையாக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்! | Mullaitivu Terrorism Tamil Journalist Statementtid

விகாரைக்குள் திருட்டு: இரு பெண்கள் கைது

விகாரைக்குள் திருட்டு: இரு பெண்கள் கைது

முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் இது தொடர்பான கடிதம் திவாகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

காரணம்

மேலும், குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளியுமாவார்.

பல ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலகராக கடமையாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உப தலைவராகவும் சுயதீனமான ஊடகவியலாளராகவும் இருந்து வருகின்றார்.

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்! | Mullaitivu Terrorism Tamil Journalist Statementtid

இவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்ற காரணம் குறிப்பிடப்படவில்லை.

காரணத்தை அறிவதற்காக குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல் பொறுப்பதிகாரியினையும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினரையும் நேரில் சந்தித்து கேட்ட போது காரணம் தெரியாது என அவர்கள் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023