சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் குற்றவியல் நீதிமன்றில்..! பிரித்தானியாவில் எதிரொலித்த குரல்

Labour Party Mullivaikal Remembrance Day United Kingdom
By Shadhu Shanker May 16, 2024 05:12 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இலங்கை
Report

சிறிலங்காவின்(Sri lanka) போர்க் குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான ஆதரவை பிரித்தானிய தொழிற்கட்சி(Labour Party )தலைவர் கியர் ஸ்ராமர்( Keir Starmer )வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் நேற்று (16) தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்விலேயே அவர் அதனை தெரிவித்தார்.

ஈழத்தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்டு, கொடூரமான அனைத்துலக குற்றமீறல்களுக்கு ஆளாக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்களை நினைவில் நிறுத்தி, அவர்களை மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தேசிய தலைவருக்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வு

தேசிய தலைவருக்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வு

தொழிற் கட்சி

இவ்வாண்டு பிரித்தானியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியே வெற்றி பெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் குற்றவியல் நீதிமன்றில்..! பிரித்தானியாவில் எதிரொலித்த குரல் | Mullivaikal Remeberence Day Labor Party Tamils Uk

கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த இரங்கலையும் ஸ்ராமர் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாள் மட்டுமன்றி, அவசரமாக நீதி கிட்ட வேண்டியதை நினைவூட்டும் பதிவு என்பதையும் ஸ்ராமர் வலியுறுத்தினார்.

மே 18 ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுகோள்!

மே 18 ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுகோள்!

ஈழத்தீவில் தமிழ் மக்கள்

அத்தோடு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்கள் மறக்கப்பட முடியாதவை என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார். தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான அனைத்துலக குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலமே மடிந்த மக்களை நினைவேந்தி மதிப்பளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் குற்றவியல் நீதிமன்றில்..! பிரித்தானியாவில் எதிரொலித்த குரல் | Mullivaikal Remeberence Day Labor Party Tamils Uk

ஈழத்தீவில் தமிழ் மக்கள் முகம்கொடுத்த கொடூரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றத் தவறியதையும், கடந்த கால அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும், விமர்சித்திருந்தார்.

  தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துலகக் குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 அரசியல் தீர்வு 

அத்தோடு, தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் ஸ்ராமர் நினைவூட்டியதோடு, ஈழத்தீவில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும், தமிழ் மக்களுக்குப் பரிபூரணமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் குற்றவியல் நீதிமன்றில்..! பிரித்தானியாவில் எதிரொலித்த குரல் | Mullivaikal Remeberence Day Labor Party Tamils Uk

இந்நிகழ்வில் டேம் சிபோன் மக்டொனா, வெஸ் ஸ்ரிறீற்ரிங் (நிழல் சுகாதார மற்றும் சமூக நலப் பராமரிப்பு அமைச்சர்), கத்தரின் வெஸ்ற் (ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிழல் அமைச்சர்), சேர் ஸ்டீபன் ரிம்ஸ் (முன்னாள் நிதித்துறைத் தலைமைச் செயலர்), கரத் தொமஸ் (நிழல் பன்னாட்டு வணிக அமைச்சர்), ஜேமரஸ் முறே (நிழல் நிதித்துறை செயலர்), சாறா ஜோன்ஸ் (தொழில்துறை மற்றும் கரிமநீக்க நிழல் அமைச்சர்), ஜோன் மக்கொனெல் (முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சர்), டோன் பட்லர் (முன்னாள் அமைச்சர்), வீரேந்திர சர்மா, பரி காடினர் (முன்னாள் காலநிலை மாற்ற நிழல் அமைச்சர்) போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

போரின் கொடூரங்களையும், நீதியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் திகழ்கையில், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திக் கடந்த காலக் கொடூரங்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிசெய்வதிலும், ஈழத்தீவில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வைக் காண்பதிலும் தொழிற் கட்சி கொண்டுள்ள ஆதரவை உறுதிசெய்யும் வகையில் ஸ்ராமரின் உணர்வுபூர்வமான கோரிக்கை வெளிப்படுத்துகின்றது.

யாழில் முன்னாள் எம்பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

யாழில் முன்னாள் எம்பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025