வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day
By Kiruththikan May 12, 2022 01:34 PM GMT
Report

வடுக்களும் வலிகளும் நிறைந்த தமிழர் வரலாற்றில் காலங்கள் கடந்தும் நினைவுகளில் இருந்து அழியாது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் ஒரே முகவரியாய் போன முள்ளிவாய்க்கால் மண்ணின் கதை கூறும் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தவிர்க்க முடியாத ஒன்றே.

உயிரைப்பிடித்து வைத்த உன்னத கஞ்சி எனப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சியே சுமக்க முடியாத வலி சுமந்த நேரத்தில் எம் தமிழ் மக்கள் உயிரை காத்த உன்னத உணவாகும்.

அதை நினைவுகூறும் முகவமாவே முள்ளிவாய்க்கால் கஞ்சி தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது 

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது இன்று(12) காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 06 நாட்களிற்கு குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

மன்னார்

மன்னார் - பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது இன்றைய தினம் (12) காலை 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

அதனைத்தொடர்ந்து பள்ளிமுனை பங்குத்தந்தையின் மத பிரார்த்தனையை தொடர்ந்து அங்கு கூடி நின்றவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க உறுப்பினர்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் "கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆரம்ப நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகளும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

மே 12 முதல் மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மேற்கு பொது சந்தை அமைந்திருந்த பகுதியில் கஞ்சி வழங்கு செயற்பாட்டை காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

கஞ்சி ஆக்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் 25 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம்' எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுமாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

மட்டக்களப்பு

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து கஞ்சி காய்ச்சப்பட்டு அவற்றினை மக்களுக்கு வழங்கி தமது துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மக்களின் உணர்வுகள் சர்வதேச சமூகத்தினால் மதிக்கப்பட்டு அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் வடகிழக்கு மாகாண வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் லவகுமார்,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்களாக அருட்சகோதரர் ஜெகநாதன் அடிகளார்,எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

இதன்போது மட்டக்களப்பு நகர் மற்றும் பிரதான பேருந்து நிலையம் என்பவற்றில் கஞ்சிகள் பகிரப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றுமுதல் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வவுனியா இலுப்பையடியில் இடம்பெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

இதேவேளை வீதியால் சென்ற பொது மக்களுக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அக்கரைப்பற்று

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் நினைவுநாள் தொகுப்பு | Mullivaikkal Porridge Remembrance Day

ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026