யாழில் கரையொதுங்கிய அகதிகள் படகு - வெளியாகிய புதிய தகவல் (படங்கள்)
படகு
யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் பங்களாதேஸில் இருந்து இந்தோனேசியா நோக்கி பயணப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் வந்தவர்களில் ஒருவருக்கு உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
அதிகளவான சிறுவர்கள்
கட்டைக்காட்டு கடற்பரப்பிலிந்து 5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு கரை ஒதுங்கி வந்த நிலையில் பிரதேச கடற்தொழிலாளர்களினால் இது தொடர்பில் சிறிலங்கா கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த படகிலிருந்தவர்களை மீட்கும் பணிகளுக்காக 4 கடற்படைக் கப்பல்கள் அனுப்பி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,
குறித்த படகில் அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

