டொலர் தொடர்பில் எழுந்துள்ள பலத்த சந்தேகம்! விளக்கம் கோருகின்றது எதிரணி
நாட்டின் டொலர் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அந்த டொலர் எவ்வாறு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கையிருப்பிலுள்ள 3.1 பில்லியன் டொலர்கள் என்னவென்று சொல்லுங்கள். கடந்த வாரம் எங்களிடம் 1.6 பில்லியன் டொலர்கள் இருந்தது என்பதுவே எங்களுக்குத் தெரியும், ஆனால் எங்களிடம் செலவழிக்க முடியுமான டொலர்களாக 1.1 பில்லியன் டொலர்களே இருந்தது, மீதமுள்ளவை தங்கம் மற்றும் பிற வகையானதாகும்.
3.1 பில்லியன் டொலர் இருப்பதை எவ்வாறு உள்ளன என்பதை விளக்கவும். கையிருப்பு தங்கமாக இருக்கலாம்? சீன யுவானாக இருக்கலாம்? என்று காட்டுகின்றன. எனவே, இந்த 3.1 பில்லியன் டொலர்கள் எவ்வாறு உள்ளன என்பதையும் அந்த 3.1 பில்லியன் டொலர் வைத்து கடனை எப்படி அடைக்கப் பயன்படும் என்பதை எங்களிடம் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபகச நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியதை நாம் பார்த்தோம். இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன என்று கூறினார். அது மிகவும் நல்லது.
இரண்டாம் வருடத்திலும் சேர் பெயில். சேர் பாஸ் செய்ய முயற்சிப்பதாக முதல் வருடத்தில் சொல்லப்பட்டது. இரண்டாம் ஆண்டும் படு தோல்வியாகவே பார்க்கிறோம்.
எனவே இன்னும் மூன்று வருடங்கள் பற்றி சிந்திக்க முடியாது. அதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை. நாட்டு மக்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு அனுமதிப்பார்களா என்பதே கேள்வி. ஆனால் இப்போது சேர் அரச அதிகாரிகள் மீது தவறுகளை சுமத்துவதை காண்கிறோம்.
தனது வாயால் வரும் சகல சொற்களும் சுற்றறிக்கை என்று அரச அதிகாரிகளுக்கு பணித்த அரச தலைவர் தற்போது அரச அதிகாரிகள் மீது தவறுகளை போட முயற்சிக்கிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.