வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு கொடியேற்றத்திற்கான புனித கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப் பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி, கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து நேற்று (16) எடுத்துவரப்பட்டது.

அத்துடன் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு நேற்று (16) சிறப்பாக இடம்பெற்றது.
அதற்கமைய நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டதைத் தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்