தேசபந்துவின் பதவி நீக்க தீர்மானம்: சபாநாயகருடன் முரண்பட்ட நாமல்
இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான விவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இடையே இன்று வாக்குவாதமொன்று ஏற்பட்டது.
அதன்போது, தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் (IGP) பதவியில் இருந்து நீக்கும் திட்டம் குறித்த விவாதத்தை நடத்துவதன் சட்டபூர்வமான தன்மை குறித்து கேள்வி நாமல் எழுப்பினார்.
உயர் நீதிமன்ற வழக்குகள்
நிலையியற் கட்டளை 98F இன் கீழ், நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விஷயத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 09 வழக்குகள் விவாதிக்கப்படுகின்றன. நீதிமன்ற வழக்கின் முடிவு நாடாளுமன்ற விவாதத்தால் பாதிக்கப்படாது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, பின்னர் விவாதத்தைத் தொடங்குங்கள்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ கூறினார்.
ஆய்வு செய்யப்பட்ட விதிகள்
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, “தொடர்புடைய விதிகளை ஆய்வு செய்த பின்னறே நாடாளுமன்ற விவாதம் நடத்த திட்டமிடப்பட்டதாகவும், தன் மூலம் இன்று பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, நாமல் ராஜபக்ச தொடர்ந்து சந்தேகங்களை முன்வைத்தபோதும், சபாநாயகர் தனது பதிலை ஏற்கனவே வழங்கியதாகக் குறிப்பிட்டு, அவரது உரையை நிறுத்த உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
