கோட்டாபயவின் செயற்பாடு - ஏற்க மறுக்கும் நாமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சி அமைந்ததாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உறவினரின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து தீர்மானங்களையும் அங்கீகரிக்கவில்லை
“நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. எங்கள் சரிவு வடிவமைக்கப்பட்டது. அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நான் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், அவர் நல்ல அர்த்தமுள்ள முடிவுகளை எடுத்தார்.
இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு வெளிப்படையான பதிலில், முன்னாள் அதிபர் நல்ல நோக்கத்துடன் அந்த முடிவை எடுத்ததாக கூறினார்.
விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை
"ஒரு விவசாயியின் மகனாக, அவர் தனது முடிவுகளால் விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை" என்று நாமல் குறிப்பிட்டார்.
இரண்டரை ஆண்டுகளாக நாடு மூடப்பட்ட பின்னர் கடினமான நேரத்தில் எடுக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி திட்டத்தை அவர் பாராட்டினார்.
