சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) பூமி திரும்புவதை நாசா (NASA) உறுதிசெய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வு மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் (Barry Wilmore) பத்து நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது.
தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
ஆய்வு மையம்
கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
இந்தநிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் விரைவில் விண்கலம் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்துள்ளது.
அத்தோடு,மார்ச் 12 ஆம் திகதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், நான் ஜனாதிபதியானால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)