மீண்டும் திறக்கப்பட்ட மிருகக்காட்சிசாலைகள்
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து நிறுவனங்களும் பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி முதல் உரிய நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா என்பவற்றை இவ்வாறு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்கியல் பூங்கா திணைக்களம்
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக, விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு பிரதான அலுவலகத்தின் ஊடாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களும், புத்தளம் மாகாண அலுவலகத்தின் ஊடாக குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களும் உள்ளடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுர மாகாண அலுவலகத்தின் ஊடாக அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களும், மொனராகலை மாகாண அலுவலகத்தின் ஊடாக பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களும், யாழ்ப்பாண மாகாண அலுவலகத்தின் ஊடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |