சஹ்ரானை கைது செய்யும் வாய்ப்பை தவறவிட்ட பின்னணி! 2017 இல் கிடைத்த உளவு தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரிதாரியான சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(16.06.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சஹ்ரானை குறித்து புலனாய்வு தகவல்
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து கருத்துகளும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் அதிகாரபூர்வ விசாரணை ஆவணங்களின் அடிப்படையிலேயே முன்வைத்தவை.

அசாத் மௌலானா தொடர்பான விடயங்களும் அந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே சுட்டிக்காட்டப்பட்டவை. சஹரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சஹ்ரான் உள்ளிட்ட குழு குறித்து முறைப்பாடுகள் மற்றும் உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்போது காவல்துறை அடுக்கில் உயர் பணியில் இருந்தவர்கள் ஷானி அபேசேக்கர, மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர்.
இதன்படி அவர கைது செய்திருந்தால் இந்த கொடிய தாக்குதலை தடுத்திருக்கலாம். இங்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? ரணில் விக்ரமசிங்கவா, கோட்டாபயவா? அல்லது சுலேஸ் சலேவா?
சரியான விசாரணை
மேலும் வவுணதீவு சம்பவம் குறித்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்வாங்கப்பட்டனர். இவை அனைத்தும் உண்மையை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்டவை.

இது குறித்து கூட சரியான விசாரணையை முன்னெடுத்திருந்தார் சஹ்ரானை கைது செய்திருக்கலாம்.
வவுணதீவு சம்பவம், மாவனெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவம், தஸ்லிம் வழங்கிய தகவல்கள் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்க முடிந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய விசாரணைகளிலும் சஹரான் குழுவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த விசாரணைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
சர்வதேச அளவிலான மீளாய்வு விசாரணைகள் அவசியம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல்கள் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது மிகப்பெரிய தவறு. அதற்கான பொறுப்பு புலனாய்வு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமே உள்ளது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |